f

Latest Post



பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

ஊர் தோறும் குளத்தடியில் நம் கணபதி அமைந்திருப்பார்
ஒவ்வொரு மனிதனது நல் உள்ளத்திலும் குடியிருப்பார்
எல்லோரும் நலம் காண எண்ணுகின்ற மனிதருக்கு
எந்நாளும் விநாயகனின் திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும் அவன் அருள் நலம் சேர்க்கும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

பெற்றோருக்கு மேலான உலகம் இல்லை என்றார்
கற்றோர்க்கு மேலான பெரியோர் இல்லை என்றார்
நற்றன விநாயகனை நாளும் தொழும் போது
அர்த்தம் புரிந்துவிடும்
திருள் அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்...
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு...!

ஒருநாளில் ஒருவேளை ஐங்கரனை நினைத்துவிடு
உயிர்கள் யாவும் உந்தனது சொந்தம் என கருதிவிடு
நீயும் இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழ விடு...
இந்த எண்ணம் உனக்கிருந்தால்
திரு அருள் துணை இருக்கும்
தினம் தினம் மனம் துதிக்கும்
அவன் அருள் நலம் சேர்க்கும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு
வள்ளலாம் கணபதியின் நல் ஆசியும் அருளும் கிடைத்து விடும்
பிள்ளையார் சுழி போட்டு நீ நல்லதை தொடங்கிவிடு


Aadaludan Paadalai Kettu Song Lyrics.

பெண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்.... ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹாஹோய்
ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்..

ஆண் :
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்...ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹாஹோய்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்..
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

ஆண் :
கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக......
அஹஹொய், அஹஹோய்

கண்ணருகில் பெண்மை குடி ஏற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இள நீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக.......
அஹஹொய்,.......அஹஹோய்

பெண் :
செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக......
அஹஹொய்,.. அஹஹொய்,.. அஹஹொய்

செங்கனியில் தலைவன் பசியாற
தின்ற இடம் தேனின் சுவையூற
பங்கு பெற வரவா துணையாக.....
அஹஹொய், அஹஹொய்
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட
உரியவன் நீ தானே

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்

ஆண் :
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு......
அஹஹொய்,... அஹஹொய்ஹோய்

கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு...
அஹஹொய்,... அஹஹொய்ஹோய்

பெண் :
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு...
ஒஹஹொய், ஒஹஹொய்,ஒஹஹோய்
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு...
ஒஹஹொய், ஒஹஹோய்
உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன்
புதுமையை நீ பாடு

பெண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய்
ஆண் :
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்....ஹா,ஹா,ஹா,ஹா, ஹா, ஹாஹோய்

பெண் / ஆண் :
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம்
வரும் வரும் வரும்..

உங்கள் நண்பர்கள் ஒரு தவறு செய்வதர்க்கு நீங்களே காரணமாக உள்ளீர்கள். ஏன்...? என்ற கேள்வி உங்கள் முன் எளலாம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஒரு கடையிலோ, அல்லது வீதியிலோ, நிற்க்கும் போது ஒரு சிலர் ஓரமாக ஒதுங்கி நிப்பார்கள் ஒரு சிலர் வேண்டும் என்றே மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நின்றுகொண்டிருப்பார்கள் அதை யாரவது தட்டிக்கேட்க முன் வந்தால் அவருடன் சண்டை போடுவது அப்படி உங்கள் நண்பர் சண்டை போடுவதை பார்த்து நீங்களும் உங்கள் நண்பருடன் சேர்ந்து சண்டை போடுவது இதுதான் நீங்கள் உங்கள் நண்பரை தவறு செய்ய தூண்டும் முதல் படி அதே இடத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் தப்பு யார் பக்கம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு பின் அவர்களை சமாதானம் செய்வது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். உங்கள் நண்பர் பக்கம் தப்பு உள்ளது என்றால் நீங்கள் நேரடியாக அனைவருக்கும் மத்தியில் அதை சொல்வது தவறு நீங்கள் சொல்லும் விடயம் சரியாக இருந்தாலும் சொல்லும் இடம் தவறானது ஏன்...? என்றால் உங்கள் நண்பருக்கு மற்றவர் முன்னால் சொல்லும் போது அவர் மனதில் ஒன்றை மட்டுமே நினைப்பார் நீங்காள் அவரை அவமான படுத்துவதாக உணர்வார் அதனால் அவருடன் சேந்து சண்டை போட வேண்டாம். அந்த பிரச்சனை முற்றாமல் முடித்து வைக்க பார்ப்பது புத்திசாலித்தனம். நண்பர்களுக்கு உயிரையும் கொடுக்க வேண்டும். அதற்க்காக மற்றவர்களின் உயிரை எடுக்க வைப்பது தவறு. எப்படி...? நீங்கள் உங்கள் நண்பரிடம் நல்ல பழக்கவழக்கங்களை அவருடைய மனதில் பதியும் அளவிற்க்கு புத்தி சொல்லுங்கள். புத்தி சொல்லவா...? ஆம் புத்தி சொல்வதென்றால் அப்பா அம்மா சொல்வது போல் அல்ல...! நீங்கள் உங்கள் நண்பருடன் எவ்வளவு பேசுவீர்கள் அந்த நேரம் ஒரு சில நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று நடக்கும் விடயம் நாளை நமது உறவினர்களுக்கும் வரலாம். ஒரு பிள்ளையை உங்களுடன் அனுப்பும் குடும்பம் மன சஞ்சலத்துடன் அனுப்பி வைக்க கூடாது. உங்கள் பெயரை சொன்னால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு மரியாதை வர வேண்டும். உங்களை மற்றவர்கள் ஒரு விடயத்தில் தங்களது வேலைக்காக உங்களை தூண்டி விடுவர்கள் அதில் உண்மை என்ன ? என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொண்ட பின் அதில் இறங்குவது உங்களுக்கு நல்லது.

நாம் பொது இடங்களில் ஏன் Memory அல்லது Usb வாங்க கூடாது? உங்களின் சந்தேகங்களை இப்போது பார்ப்போம்! நண்பர்களே, நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசி அல்லது கணினியில் பயன்படுத்த ஒரு Memory  அல்லது Usb வாங்குவது என்பது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான்! ஆனால் அதை நாம் பொது இடங்களில் வாங்காமல் நம்முடைய அருகில் இருக்கும் கடைகளில் அல்லது உங்களுக்கு நம்பிக்கையான கடைகளிலும் வாங்குவது நல்லது. ஆம் நண்பர்களே! ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசி அல்லது கணினியில் பயன்படுத்த ஒரு Memory அல்லது Usb வாங்குவது, ஆனால் அதை நாம் கணினியில் பயன்படுத்தும் போது அந்த Memory அல்லது Usb ஒரு முறை அல்லது இரண்டு முறை கணினியில் காட்டும் அதை நாம் நம்முடைய வாகனத்தில் ஏதாவது பாடல்கள், கேட்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் அது வேலை செய்யாது ஏன் என்றால் அது முற்றிலும் போலியான Memory அல்லது Usb யாக இருக்கும். அது மட்டுமல்ல! அந்த Memory  அல்லது Usb யில் கணினியில் இருந்து பாடல்களை ஏற்றும் போது ஒரு பாடல் அல்லது குறிப்பிட்ட சில பாடல்களை மட்டும் தான், நீங்கள் ஏற்ற முடியும். அது ஏன் என்று தெரியவில்லையா? அதாவது நீங்கள் ஒரு Memory அல்லது Usb வாங்குவீற்கள் அதில் எழுதி இருக்கும் GB1, 2 ,4,8,16,32  என்ற எழுத்தை நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால் அந்த Memory அல்லது Usb அதில் எழுதி இருக்கும் எழுத்து தரத்துடன் இருப்பதில்லை. நாம் கணினியில் அந்த Memory அல்லது Usb ஐ திறந்து பார்க்க முடியும். அதில் GB1, 2 ,4,8,16,32 என்று நம் கணினியில் காண்பிக்கும் ஆனால் அது உண்மை இல்லை. ஏன் என்றால் நாம் வாங்கும் போலியான Memory அல்லது Usb களின் உள்ளே லூப் செய்ய ப்பட்டுள்ளது அதாவது லூப் என்று நான் சொன்னது நீங்கள் உங்கள் Memory அல்லது Usb கணினியில் பார்க்கும் போது அதில் குறிப்பிட்ட GB நம்முடைய கணினியில் காண்பிக்கும் ஆனால் அது லூப் செய்யப்பட்டுள்ளது அது உங்கள் Memory அல்லது Usb அளவை மாத்திரமே காண்பிக்கும். பாடல்களை ஏற்ற முடியாது, ஆம் நண்பர்களே! அது மட்டுமல்ல ஒரு சில கையடக்க தொலைபேசியில் Memory ஐ போட்ட பின், உங்களுக்கு தேவையான அனைத்து (சாப்ட்வேர்) மென்பொருள் பாடல்களை ஏற்றும் வகையில் இருக்கும் ஆனால் அதை கழட்டி விட்டு மீண்டும் போட்டால் format கேட்கும். அதனால்தான் சொல்கிறேன் பொது இடங்களில் வாங்க கூடாது, ஏன் இப்படி பொது இடங்களில் வாங்க கூடாது என்றால், நீங்கள் ஒரு Memory அல்லது Usb வாங்கி பேருந்தில் ஏறி சென்றுவிடலாம். நாளை அந்த இடத்தில் பார்க்கும் போது நீங்கள் Memory அல்லது Usb வாங்கிய ஆட்களை பார்க்க முடியாது! இதே Memory அல்லது Usb கடையில் வாங்கி இருந்தால் நாளை கூட மாற்ற முடியும். போலியை கண்டு ஏமாற்றம் வேண்டாம். ஆம் நண்பர்களே! நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் போலியான வியாபாரம் செய்ய நினைப்பவர்களை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் போலியை கண்டு ஏமாராதீற்கள்.

நமது கையடக்க தொலைபேசிகளில் எவ்வளவு மென்பொருளை வைத்திருந்தாலும் நமக்கு பயனுள்ள மென்பொருள் அதிகளவில் இருப்பதில்லை. ஏதாவது அரட்டை மென்பொருள் அல்லது யாரையாவது ஏமாற்றுவதற்காக நாம் அதிகளவில் மென்பொருளை வைத்திருப்போம். சரி நாம் நமது கையடக்க தொலைபேசியில் எப்படி ஸ்கேன் செய்யவது என்பதை பார்ப்போம். முதலில் உங்கள் கையடக்க தொலைபேசியில் camscanner என்ற மென்பொருளை நிறுவ (install) வேண்டும். இந்த மென்பொருள் உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள play store இல் கிடைக்கும் அதை பதிவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் புகைப்படங்க்கள் அல்லது கோப்புகளை மிக தெளிவானமுறையில் pdf , image முறையில் (save) சேமிக்க முடியும். அல்லது நீங்கள் உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ள முடியும்.







நாம் அன்றாடம் கணினியில் பார்க்கும் YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
நாம் YouTube வில் வீடியோ பாடல்கள் , திரைப்படங்கள் , நகைச்சுவைகள் அல்லது தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் எதுவாகினும் நமக்கு பிடித்த வீடியோவை தரவிறக்கம் செய்ய YouTube அறிமுகப்படுத்தியுள்ள UMMY எனும் இந்த மென்பொருள் இலகுவான முறையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள உதவுகின்றது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கிழே உள்ள Download என்பதை அழுத்தி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த மென்பொருளை நிறுவிய பின் கீழே உள்ள வீடியேவை பார்த்து பின்பற்றுங்கள்.

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget